Saturday, September 7, 2013


சே குவேரா
வீரத்திற்கு மரணமில்லை
பொலிவியா நாட்டில் பிறந்தவனே
புரட்சியின் புனலாய் புலர்ந்தவனே
சரித்திரமாக மிளிர்ந்தவனே
சந்தனமாகத் தேய்ந்தவனே

உரிமைப் போருக்கு உரமாய்
உண்மை விடுதலைக்கு வேராய்
உலக விழிப்புக்கு ஆதவனாய்
உயிரைக் கொடுத்த உன்னதமானவனே
சேகுவாரா என்னும் பெயரை
செதுக்கினாய் உலக வரலாற்றில்
உழைக்கும் மக்களின் தலைவனாய்
உன்னை நீயே உருவாக்கினாய்
காலங்கள் காற்றாய்ப் பறந்திடும்
மறைந்திடும் சந்ததி ஆயிரம்
மாறாமல் இருப்பது ஒன்றேதான்
மக்களுக்காக போராடும் வீரமே

No comments:

Post a Comment