Saturday, June 15, 2013

ஈன்றவளும் பெண்ணே
ஈரத்தவளும் பெண்ணே
ஈன்றவள் தாயானாள்
ஈர்த்தவள் தாரமானாள்
தாயானவள் காட்டுவாள் பாசத்தை
தாரமானவள் காட்டுவாள் நேசத்தை
பாசமும், நேசமும்
புடை சுழ்வதே குடும்பமாகும்

குடும்பம் என்பது குதூகூலமாகும்
உயிருக்கு ஈடாய்
உயிரை பணயம் வைப்பாள் தாய்
உணர்வுக்கு ஈடாய்
உணர்வினை உணர்ந்து
நடப்பாள் தாரம்
தாயும் தாரமும் இரு கண்கள்
சேயும் சுகமும் இவர்களது எண்ணங்கள்
தாயினைத் துதிப்போம்
தாரத்தை மதிப்போம்!!!

No comments:

Post a Comment